பக்கங்கள்

புதன், 16 மே, 2012

உலகநாடுகளின் நேரத்தை கணக்கிடுகிம் கிரீன்விச் முறை தெரியுமா


உலகநாடுகளின் நேரத்தை கணக்கிடுகிம் கிரீன்விச் முறை தெரியுமா

,

உலகம் முழுவதும் நேத்தை கணக்கிட ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை கிரீன்விச் முறை  . இதன் மூலம்  நேரத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே
பூமி தன்னைதானே  சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவர 24 மணிநேரம் (1440 நிமிடங்கள் ) ஆகிறது அதாவது சூரிய ஒளி பூமியில் ஒரு இடத்தில் பட்டு மீண்டும் அதே இடத்தில் பட ஒரு நாள் ஆகிறது பூமியின் மேல் வடக்கு தெற்காக வரையப்பட்ட கற்பனை கோடுகளே தீர்க்கரேகைகள்  . இங்கிலாந்து நாட்டில் கிரீன்விச் எனுமிடத்தை 0 தீர்க்க ரேகையாக கொண்டும் அதற்கு கிழக்குபக்கம் 180 தீர்க்கரேகைகளும் மேற்க்குபக்கம் 180 தீர்க்கரேகைகளும் ஆக மொத்தம் 360 தீர்க்கரேகைகளும் விஞ்ஞானிகளால் அமைக்கப்பட்டது .

பூமி உருண்டையின் மேல் உள்ள 360 தீர்க்கரேகைகளின் மீதும் ஒளிபட 24 மணிநேரம் அல்லது 1440 நிடங்கள் ஆகின்றது
360 தீர்க்கரேகைக்கு =1440 நிமிடம் எனில்  ஒரு தீர்க்கரேகைக்கு
1440*1/360= 4 நிமிடங்கள்
சூரிய ஒளி ஒரு தீர்க்கரேகையை கடக்க நான்குநிமிடங்கள்  ஆகின்றது  15 தீர்க்கரேகைகளை கடக்க 15*4=60 நிமிடங்கள் ஆகின்றது இதன் அடிப்படையில் ஒரு ஊர் எந்த தீர்க்கரேகையில்  அமைந்துள்ளது என்பதை வைத்து அந்த ஊரின்  நேரம் கணக்கிடப்படுகிறது   ஒரு ஊர் 45 தீர்க்கரேகையில் இருந்தால்  0 தீர்கரேகையில் இருந்து அந்த ஊரை சூரிய ஒளி கடக்க ஆகும் நேரம் 45*4=180 நிமிடங்கள் அதாவது மூன்று மணிகள் ஆகும் அந்த ஊர் தீர்க்க ரேகையின் கிழக்கு பக்கம் இருந்தால் 12 மணியை கூட்டிக்கொள்ள வேண்டும் , மேற்க்குபக்கம் இருந்தால் 12 மணியை கழித்துக்கொள்ள வேண்டும்.
 இந்தியா கிழக்கு மேற்காக 68 கிழக்கு தீர்க்கரேகையில் இருந்து 97 கிழக்கு தீர்க்கரேகை வரை பரவியுள்ளது  ஒவ்வொரு தீர்க்கரேகைக்கும் நேரம் கணக்கிட்டால் இந்தியாவில் வட , தென் மாநிலங்களில் வேறு வேறு நேரம் கிடைக்கும் அதனால் நேர குழப்பம் ஏற்படும் எனவே  இந்தியாவில் அலகாபாத் அருகே செல்லும் 82 1/2 தீர்க்கரேகையை மத்தியதீர்க்கரேகையாக கொண்டு இந்தியா முழுமைக்கும் ஒரே நேர அளவு கணக்கிடப்படுகிறது
இந்தியா 82 1/2 கிழக்கு தீர்க்கரேகையில் உள்ளதால்
 82 ½*4 =330 நிமிடங்கள்  அதாவது 5 மணி 30 நிமிடங்களை கிரீன்விச்நேரத்துடன்  கூட்டிக்கொள்ள வேண்டும்
என்ன நண்பர்களே  நேரத்தை இப்படித்தான் வகுத்து தந்து இருக்கின்றனர் விஞ்ஞானிகள்  ஆனால் நேரத்தில்  நாம் என்ன செய்ய வேண்டும் என வகுத்து செயல்பட்டால் தான் வாழ்வில் உயரமுடியும்

இலவச மென்பொருளை டவுன்லோடிங் செய்யும் முன் கவனிக்கவேண்டியவை

,

1.   இலவசம் என்ற  காரணத்திற்காக கிடைக்கும் எல்ல மென்பொருள்களையும் டவுன்லோடிங் செய்யாதீர்கள் தேவையற்ற மென்பொருள்கள் உங்கள் கணினியின் வேகத்தை குறைத்து விடும்.
2.   ஒரு மென்பொருளை ஒரு முறைதான் பயன்படுத்தவேண்டும் எனும் சூழ்நிலையில்  அந்த மென்பொருளை டவுன்லோடிங் செய்வதைவிட  ஆன்லைனில் அந்த வேலையை செய்துகொள்ளுங்கள் .
3.   ஒரு தளத்தில் இருந்து மென்பொருளை டவுன்லோடிங் செய்யும் முன் அந்த மென்பொருளை எத்தனை பேர் தரவிறக்கம் செய்துள்ளனர் அதற்கு யாரவது கருத்து சொல்லி இருக்கிறார்களா என்று பாருங்கள் குறிப்பாக அதிகம் டவுன்லோடிங் செய்யப்பட்ட மென்பொருளை டவுன்லோடிங் செய்யுங்கள்
4.   நீங்கள் மென்பொருள் டவுன்லோடிங் செய்யும் தளம் வைரஸ் , மால்வேர் போன்ற தாக்குதல் இல்லதவையா என உறுதி செய்துகொள்ளுங்கள்
5.   ஒரே தேவைக்கு பல மென்பொருள்கள் பயன்படுத்துவதை தவிருங்கள் உதாரணமாக player , cleaner , போட்டோவை மாற்ற செயல்பாடுகளுக்கு பல மென்பொருளை பயன்படுத்தாதீர்கள்

6.   எந்த ஒரு மென்பொருளையும் அதன் தயாரிப்பு தளத்தில் இருந்து டவுன்லோடிங் செய்வதை தவிருங்கள் ஏன் எனில்  அவர்களின் மென்பொருளை அவர்கள் உயர்த்திதான் சொல்வார்கள்

7.   கேம்ஸ்  போன்றவற்றை டவுன்லோடிங் செய்யும் போது மிக கவனம் தேவை ஏன் எனில் சில கேம்ஸ்வுடன் இணைந்து வரும் மால்வேர்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்களான வங்கி கணக்கு எண் முக்கியமான பாஸ்வேர்டு போன்றவைகளை  திருடி  அதை தயாரித்தவருக்கு தெரியபடுத்திவிடும்

8.   குறிப்பிட்ட தேவைக்கு  உங்களின் நண்பர்கள் என்ன வகையான  மென்பொருளை பயன்படுத்துகிறார்கள்  அதனால்  அவர்களுக்கு பயன் கிடைத்ததா  எனக்கேட்டுபாருங்கள் அல்லது கூகுள் மூலம் அந்த மென்பொருளின் Review வை தேடி படித்துபார்த்து பின் டவுன்லோடிங் செய்யுங்கள்

புதன், 25 ஏப்ரல், 2012

ஆத்தா நான் பாஸாயிட்டேன் - ஆனந்தவிகடனில் எனது வலைப்பூ

,

நெஞ்சம் நெகிழ்கிறது , ஆனந்தத்தில் கண்கள் பனிக்கிறது ,எனது வலையுலக சொந்தங்களே உங்களுக்கு  நன்றி சொல்ல வார்த்தைகளற்று தவிக்கிறேன்

இன்று ஆனந்தவிகடனின்(02.05.2012) வலையோசை பக்கத்தில் எனது வலைப்பூ வந்து உள்ளது . 2008 ஏப்ரல் 2 இல் வலைப்பூ என்னவென்று தெரியாமலே மெயில் ஐடி மூலம் வலைப்பூவை உருவாக்கி விட்டேன் அதில் hai friends this is my first blog pls say about blog. my id aguruking@gmail.com என்று ஒரு பதிவிடல் செய்திருந்தேன் (அந்த பதிவிடலை பார்க்க http://www.haiguru.blogspot.com/ ) தமிழ்கூறும் நல்லுலகம் என்னை திரும்பிகூட பார்க்காத காரணத்தால் ஒரு சுபயோகசுபதினத்தில் உருவாக்கிய  வலைப்பூவை மறந்தேபோனேன் . 

கல்வி சார்ந்த செய்திகளின் கருவூலமாக ஒரு வலைப்பூவை நடத்தி வருபவரும்www.teachersalem.blogspot.in கணினி நுட்பங்களை கற்று கொடுத்த குருவுமான ஆசிரிய நண்பர் திரு விஜய்சந்தரின் வழிகாட்டுதலின் படி ஒரு வலைப்பூவை மீண்டும் தொடங்கி பதிவிட ஆரம்பித்தேன் .எதை பதிவிடுவது எனத்தெரியவில்லை பள்ளி பாட புத்தங்களை வாசித்த நேரத்தை காட்டிலும் கல்கி, புதுமைபித்தன் , சுஜாதா, சுந்தரராமசாமி, கு.அழகிரிசாமி , ச.கந்தசாமி, நாஞ்சில்நாடன், கி.ராஜநாரயணன் , வண்ணதாசன், வண்ணநிலவன் , அசோகமித்திரன் , அறிவுமதி, கல்யான்ஜி , மீரா,  போன்றோரின் படைப்புகளை தேடி தேடி படித்த நேரம்தான்  அதிகம் அவர்களைப்போல கதைகள் கவிதைகள் எழுதலாம் என்றால் புலியை பாத்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாகிவிடும்  எனவே என் சிற்றறிவிற்கு எட்டியவற்றை பதிவிட்டு வருகிறேன்.

வலையுலகம் மிகப்பெரிய கடல்  நமக்கோ அரைகுறை நீச்சல் என்ன செய்வது என்று தெரியாத நேரத்தில் அன்புத்தம்பி என்டர் த வேர்ல்டு (www.wesmob.blogspot.com )  ஸ்டாலின் ஆபத்தாண்டவனாக வந்து தொழில்நுட்ப உதவிகளை செய்து வருகிறார் ஆனந்தவிகடனில் எனது வலைப்பூ வருவதற்கு மிக முக்கிய காரணம் எனக்கு சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை  மேலும் மேலும் எழுத வைத்தது  வலையுலக  நண்பர்களாகிய நீங்கள்தான் எனவே   இந்த  ஆனந்த தருணத்தில்  உங்களை இருகைகூப்பி  வணங்குகிறேன் . ஆனந்தவிகடனின் வெளியீட்டினை பார்த்துவிட்டுஎனக்கு மின் அஞ்சல் , தொலைபேசி, குறுந்தகவல் வழியாக வாழ்த்து கூறிய பள்ளி , கல்லூரி தோழர்களுக்கும் தோழிகளுக்கும் எனது மனங்கனிந்த வாழ்துகள் .   என்னை நேசிக்கும் நெஞ்சங்களாகிய உங்களுடனான   நட்புபயணத்தில் உங்களுடன் கைகோர்த்து வருகிறேன் வாருங்கள் தோழர்களே நாம் வாழும் சமுதாயத்திற்கு  நம்மால் முடிந்த உதவிகள் செய்வோம் . வீழ்வது நாமாக இருப்பினும் வெல்வது தமிழாக இருக்கட்டும்   .



ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

பூமிக்கு நீர் வந்தது எப்படி ? நவீன அறிவியல் கண்டுபிடிப்பு

,
பிரபஞ்சவெளியில் பூமியில் மட்டும் உயிரினங்கள் உருவாக காரணம்  நீர் ஆனால் அந்த நீர் எப்படி உருவானாது என்பது விஞ்ஞானிகளின் மண்டையை குடைய வைக்கும் கேள்வி  . இக்கேள்விக்கான பல்வேறுபட்ட விடைகள் விஞ்ஞானிகளிடையே காணப்பட்டாலும் தற்போது அனைவரும் ஏற்ககூடிய அறிவியல் தீர்வை விஞ்ஞானிகள் முன்வைக்கின்றனர் .
முதலில் அரோர எனப்படும் மாயாஜால ஒளியை பற்றி காண்போம்
 பூமியின் துருவபகுதிகளில் காணப்படும் அதிகப்படியான காந்த ஈர்பினால் காற்றில் உள்ள மூலக்கூறுகள் மின்சக்தி பெறுகின்றன இதனால் சூரிய ஒளியில் அணுக்கள் மின்னேற்றம் பெற்று ஒளிருகின்றன இதை பார்த்தால் வர்ணஜாலமாய் கண்களுக்கு விருந்து படைக்கும்  

              அரோரா ஒளியை பற்றி  லூயிஸ்டிராங்கு எனும் ஆய்வாளர்  ஆராய்ந்து வந்தார்  வளிமண்டல அடுக்கினுள் சூரிய ஒளி விழும்போது  பூமியின் பகல் பகுதிகளில் புற ஊதாக்கதிர்களின் ஒளி அலை நீளங்கள் பிரகாசமாய் அரோராவாய் ஒளிரும் இதை ஆராய்ச்சி செய்ய முனைந்த டிராங்கு டைனமிக் எக்பிளோரர் எனும் செயற்கைகோளின் மூலம்  புற ஊதாக்கதிர்களை புகைப்படம் எடுத்து ஆராய்ந்தார் அதில் பூமின் பகல் பகுதிகள் பிரகாசமாய்  ஒளிர்ந்தது ஆனால் அதில் சில கரும்புள்ளிகள் காணப்பட்டன அடுத்தடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கரும்புள்ளிகள் நகர்ந்து நகர்ந்து காணப்பட்டது . கரும்புள்ளிகள் ஏற்பட என்ன காரணம் என்று ஆராய்ந்த போது  நீர் மூலக்கூறுகள் என்று கண்டார் .

               பூமியின்  வளிமண்டலத்தின்  உயர் அடுக்குகளில் நீர் மூலக்கூறுகள் சாத்தியம் இல்லை  ஆனால் புகைப்படத்தில்  கரும்புள்ளிகளாய்   நீர் வந்தது எப்படி என்று மேலும் மேலும் ஆராய்ந்தார் முடிவில் வால்நட்சத்திரத்தில் இருந்து சிறு சிறு பனிக்கட்டிகளாக பூமின்மேல் விழுகிறது  அதனால்தான் புகைப்படத்தில் கரும்புள்ளிகள் தோன்றின எனக்கண்டறிந்தார் . வால்நட்சத்திரம்  என்பது பாதிக்கு பாதி நீர் நிறைந்தது . பல மில்லியன் ஆண்டுகளாக இவ்வாறு வால்நட்சத்திரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் நீரை பெற்றதால் பூமியில் கடல்கள், ஆறுகள் ,ஏரிகள் போன்ற நீர் நிலைகள் தோன்றின என லூயிஸ்டிராங்கு கூறினார் ஆனால்  இக்கருத்து சரியல்ல என்று  ஒரு சில விஞ்ஞானிகள்  வாதிடுகின்றனர்  மற்றும்  சிலரோ  இக்கருத்தை  தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்கின்றனர் எது எப்படியோ அறிவியல் என்பது மக்களுக்கு நன்மைகளை  செய்தால் நல்லதுதானே .

ஆர்கிமிடிஸ் நடத்திய கண்ணாடி போர் யுத்தம்

,
யுரேகா ! யுரேகா என்ற வார்தையின் மூலம்  வரலாற்றின்  சாதனை பக்கத்தில் பதிவான ஆர்கிமிடிஸ் கணிதம் , இயற்பியல் , வானியல் போன்றவற்றிற்கு சிறப்பான பங்களிப்பு செய்திருக்கிறார். கிரேக்க நாட்டின் சிசிலியிலுள்ள ஸைரக்யூஸ் என்னும்  நகரில் கி.மு 287 ல் பிறந்தார் ஆர்கிமிடிஸ் நடத்திய கண்ணாடி போர் யுத்தம்  என்பதை  தெரிந்து கொள்ளும் முன் அவரின் சாதனைகள்  சிலவற்றை பார்போம்
கணித சாதனைகள்
 பை(π) என்பதின்  மதிப்பை துல்லியமாக கண்டறிந்தார்  இந்த மதிப்பு மூலம் வட்டத்தின் சுற்றளவு, பரப்பளவு போன்றவற்றை கண்டுபிடித்தார் .மேலும் கோளத்தின் மேற்பரப்பிற்கும் கனஅளவிற்கும்  உள்ள தொடர்பையும் கண்டறிந்தார் . இன்றும் வட்டம், கோளம், உருளை போன்றவற்றின் கனஅளவு, பரப்பளவை கண்டுபிடிக்க பை மதிப்பைதான்  நாம் பயன்படுத்துகிறோம்
யூக்ளிட் கண்டுபிடித்த ஜியோமிதி எனும் வடிவ கணிதத்தை நன்கு ஆராய்ந்து பல தேற்றங்களையும் தீர்வுகளையும் கூறி ஜியோமிதியை அடுத்த அடுத்த படிநிலைக்கு  உயர்த்தினார் .  கணிதம் பற்றிய பல நூல்
இயற்பியல்  சாதனைகள்
 ஒரு திடப்பொருள் நீரில் மூழ்கும்போது அதனால் வெளியேற்றப்பட்ட நீரின் அளவு அந்த திடப்பொருளின் எடைக்கு சமமாக இருக்கும் என்ற ஆர்கிமிடிஸின் மிதக்கும் விதி அடிப்டையில் தான்  இன்றைய  நவீன கப்பல் போக்குவரத்து செயல்படுகிறது .
நிற்பதற்கு ஒரு இடத்தையும் ஒரு இரும்புக்கம்பியும்  தந்தால் பூமியையே புரட்டிக்காட்டுவேன் என்று  நெம்புகோல் தத்துவத்தை கூறினார் .இந்த நெம்புகோல் தத்துவ அடிப்படையில் போர்க்கருவிகள் பலவற்றையும்  கண்டுபிடித்தார் 
ஆர்கிமிடிஸ் நடத்திய கண்ணாடி போர் யுத்தம்  என்னவென்று அறிய வந்தால்  பள்ளிக்கூடத்தில் செல்லித்தந்ததை எங்களுக்கு மீண்டும்
 சொல்லி தந்து கலாய்க்கிறீங்களே  அப்படினு சொல்றீங்களா ?  
சரி சரி வாங்க ஆர்கிமிடிஸ் நடத்திய கண்ணாடி போர் யுத்தம் பற்றி  தெரிந்து கொள்வோம் .
இரண்டாம் நூற்றான்டில் இத்தாலியில் உள்ள சிரகாஸ் நாட்டை ஆர்கிமிடிஸின் உயரிய நண்பர் சிரகாஸ் ஆண்டு வந்தார் அப்போது சிரகாஸ் மீது  ரோமானியர்கள் போர்தொடுத்தனர் ரோமானியர்களின் படை பலமோ மிகப்பெரியது . சிரகாஸினுடைய படையோ சிறியது  வலிமை வாய்ந்த  ரோமானிய படைகளை வீழ்த்த ஆர்கிமிடிஸ் மிகச்சிறப்பான போர் யுத்தியை கண்டுபிடித்தார் பரவளைய வடிவில் மிகப்பெரிய  கண்ணாடிகளை நிறுவினார் அதன் மீது  சூரிய  ஒளியை பட வைத்து எதிரொளிக்கும்  சூரிய ஒளியை  ரோமானியர்களின்  கப்பல் மீது குவியச்செய்தார்  இதனால் ரோமானியர்களின்  கப்பல்கள்  பற்றி எரிந்தது ரோமானியர்களுக்கு பெருத்தசேதம் ஏற்பட்டது  . கண்ணாடிகளை பயன்படுத்தி  ரோமானியர்களின் படைகளை நடுங்கச்செய்த  ஆர்கிமிடிஸின் இச்சாதனை வரலாற்றின் பக்கங்களில்  கண்ணாடி போர் யுத்தம் என்று அழைக்கப்படுகிறது . ஆர்கிமிடிஸ் தன்னுடைய 75 வயதில்  ரோமானிய படை வீரனால் கொல்லப்பட்டார் . ஆர்கிமிடிஸ் பற்றி  மேலும் அறிய  ஒரு பவர்பாய்ன்ட் பிரசன்டேஷன்  பதிவிட்டு உள்ளேன்  பதிவிறக்கி பயன்படுத்தி பாருங்கள்

சனி, 21 ஏப்ரல், 2012

இயற்கை சலைன் (குளுகோஸ்) எது தெரியுமா ?

,
இரண்டாம் உலகப்போரின் போது சலைன்(குளுகோஸ்)  கிடைக்காத போது பல்லாயிரக்கணக்கானவர்களின்  உயிரை காப்பாற்றிய  இயற்கை சலைன் எது  தெரியுமா ? நாம்  தாகம் தணிக்க அருந்தும் இளநீர் தான்  அது . 

இளநீரில் அதிகளவு பொட்டாஷியம் உள்ளது  மேலும் வைட்டமின் B , வைட்டமின் C , போன்றவைகளும் உள்ளது .
பழங்காலங்களில்  மக்களுக்கு  மரணபயத்தை கொடுத்த  அம்மைநோயிலிருந்து மக்களை காத்தது  இளநீர் ஆகும். மேலும் சிறுநீர் ஒழுங்கிற்கும் , சிறுநீரகக் கற்களை  கரைப்பதற்கும்  , மஞ்சள் காமலையை போக்குவதற்கும்  இளநீர் அருமருந்தாகும் .
அவசர காலங்களில்  ஒருவருக்கு குளுகோஸ் ஏற்றவேண்டும் என்ற நிலையில்  குளுகோஸ் கிடைக்காத போது தகுந்த மருத்துவரின் உதவி இருந்தால்  குளுக்கோஸுக்கு மாற்றாக  சுத்தமான இளநீரை  பயன்படுத்தலாம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக