பக்கங்கள்

ஞாயிறு, 29 ஜூலை, 2012

மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?


மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?


நண்பர்களே...! இன்று நாம் தெரிந்து கொள்ள போவது மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ? என்பதைப் பற்றி... இவையாவும் என் சொந்த கருத்துக்கள். நான் படித்த புத்தகங்கள் மூலமும் என் வாழ்வில் பழகிய /சந்தித்த நண்பர்களிடம் இருந்தும் அறிந்து கொண்ட விசயங்கள். தவறு இருந்தால் அல்லது உங்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்... இனி...

மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ? நண்பர்களின் கருத்தைப் பார்ப்போம்...

01 : நிறைய உதவி செய்தேன்... இப்ப..? நன்றி கெட்ட மனுசங்க தான்.
02 : அடுத்தவனை ஏமாற்றி விட்டு வாழ்கிறானே... அவன் தான்.
03 : எல்லாமே தனக்குத் தான் என்று நினைக்கிற சுயநலக்காரன் தான்.
04 : கர்வம் அல்லது அகங்காரம் உள்ள மனுசங்க தான்.
05 : பொறாமை குணம், பேராசை உள்ள மனுசங்க தான்.
06 : பொய்யைத் தவிர எதுவுமே பேசுவதில்லை. அவங்க தான்.
07 : விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாதவங்க தான்.
08 : தவறு செய்ததை மன்னிக்க தெரியாத கோபக்கார மனுசங்க தான்.
09 : எல்லாவற்றிக்கும் சந்தேகப்படும் மனுசங்க தான்.
10 : நம்ப வைத்து கழுத்தரிக்கும் துரோகிங்க தான்.
11 : பணத்தால் மாறுகிற, பணம் தான் எல்லாமே என்று வாழும் மனுசங்க.
12 : எனக்கு ஜால்ரா அடிப்பவனை தவிர, என் கருத்தை எவன் ஏற்றுக்
       கொள்ளவில்லையோ அவன் தான்.
13 : பாராட்டோ, வெற்றியோ அல்லது ஒரு அங்கீகாரம் வந்தவுடனே தலை
       கால் புரியாமே ஆடுகின்ற மனுசங்க தான்.
14 : வாழ்க்கையில் பல தவறுகள் செய்து கொண்டு, தினமும்
       மணிக்கணக்கில் தன்னைப் பற்றி பிரார்த்தனை செய்கின்ற
       "பசுத்தோல் போர்த்திய புலி" வேசம் போடும் நயவஞ்சகக்காரன் தான்.
15 : எல்லா கெட்ட பழக்கங்களையும் (புகை, பாக்கு, மது, மாது, etc,) செய்து
       கொண்டு, தன்னையும், தன் குடும்பத்தையும் கெடுக்கிறது இல்லாம,
       அடுத்தவனையும் கெடுக்கிறானே... அவன் தான்.
16, 17, 18, 19, 20, ................ இது ஒரு மெகா தொடர் நண்பர்களே...

இவையெல்லாம் எதனால் வருகிறது...? நம் மனத்தினால் தானே... ஆகவே மனிதனின் மிகப் பெரிய எதிரி அவரவர் மனம் தான்... { ஐ... நான் வந்துட்டேன்... உன் மனசாட்சி தான்... அதுக்குள்ளே முடிவு சொன்னா எப்படி...? ரொம்ப சீரியஸ்யா எழுதுறே மாதிரி இருக்கு. எப்பவும் பாட்டு பாடிக்கிட்டே வேலை செய்வே... சந்தோசமா இல்லேனா அது மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி ஆச்சே... சரி...சரி... நீ எழுது, பாட்டு பாடுறதை குறைச்சிக்கிறேன்... }

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே... அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னையின் வளர்ப்பினிலே..." என்று கவியரசர் கண்ணதாசன் சொன்னாரே... அன்பையும், பல நல்ல விசயங்களையும் ஊட்டி வளர்கிறார்களே, பிறகெப்படி மனித மனம் மாறுகிறது...? { என்னது...? அன்னையின் வளர்ப்பினிலேயா..? அது அந்தக் காலம்... இப்போ ஆயாவின் வளர்ப்பினிலே தான்... இது பரவாயில்லே, சில வீடுகளில் போகோவும், கார்ட்டூன் நெட்வொர்க்கும் தான், குழந்தைகளை வளர்க்கிறது - இதனாலே பல "ஆட்டிசம்" (மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு) குழந்தைகள் உருவாகப் போகுது. }

குழந்தை கருவில் வளரும் போது, தாய் எது பற்றி அதிகம் நினைக்கிறாரோ அதன் தாக்கம் இருக்கும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஒரு குழந்தையின் ஐந்து வயது வரை என்னென்ன பார்க்கின்றதோ / கேட்கின்றதோ / ரசிக்கின்றதோ / ருசிக்கின்றதோ / இன்னும் என்னென்ன நடக்கின்றதோ, அவை தான் பெரியவனாக வளர்ந்த பிறகும், அந்த குணம் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அப்போ, இதற்கு முழு காரணம் பெற்றோர்கள் என்று சொல்லி விடலாமா ? அந்த குணத்தை மாற்ற முடியாதா ? { சின்ன சந்தேகம் : அம்மா குழந்தையின் மத்தியப் பிரதேசத்தை கவனிப்பாங்க... (வயிறு அதாவது உடல்நலம்) அப்பா குழந்தையின் உத்தரப் பிரதேசத்தை கவனிப்பாங்க... (மூளை அதாவது அறிவு) அப்போ, இதற்கு யார் யார் காரணம் ? அம்மாவா ? அப்பாவா...? இல்லை குழந்தையா ? "பத்துத் திங்கள் சுமந்தாளே, அவள் பெருமைப் படவேண்டும்... உன்னைப் பெற்றதனால் அவள், மற்றவராலே போற்றப்பட வேண்டும்... க‌ற்ற‌வ‌ர் ச‌பையில் உன‌க்காக‌, த‌னி இட‌மும் த‌ர‌ வேண்டும்... உன் க‌ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும், உல‌க‌ம் அழ‌ வேண்டும்..." (படம் : நான் ஏன் பிறந்தேன்) }

நம் அறிவை வளர்த்துகொள்ள தான் படிக்கிறோம். {அப்படியா ? படித்தால் மட்டும் போதுமா ?} நிறைய விசயங்களையும் அனுபவம் மூலம் பெறுகிறோம். {இது சரி... படிக்காத மேதைகள் பல பேர் உண்டு...} இதனால் நல்ல பண்புகளும், குணங்களும் தானே மேம்பட வேண்டும் ? அல்லது வளர்த்துக் கொள்ள வேண்டும் ? "நிறைகுடம் தளும்பாது" என்பார்களே ! {காலி குடமும் அப்படித்தான்} "உன் நண்பர்களைப் பற்றிச் சொல், நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்." என்று சொல்வார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் நண்பர்களிடம் மட்டும் இருக்கும் காலம் உண்டு... அதாவது படிக்கும் பருவத்தில். அப்போது ஏற்படும் காதலைக் கூட நண்பர்கள் சொல்வது படி அல்லது நண்பரையே தூது விடுவது. { அந்த வயதில் காதல் வருவது சகஜம் தானே... முடிவில் காதலிப்பவருக்கு கல்யாணம் ஆகிவிடும். சில சமயம் தூது விட்ட நண்பருடன் கல்யாணம் ஆகி விடும்...! வெண்ணிலவே... வெண்ணிலவே... விண்ணைத் தாண்டி வருவாயா...? விளையாட ஜோடி தேவை...! (படம் : மின்சார கனவு) } நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களைப் பொறுத்தே நம் குணமும் மாறுகிறது. அது நண்பர்கள் மட்டுமல்ல, யாராக இருந்தாலும்... இரட்டை வேசம் போடும் மனிதர்களிடமிருந்து ஒதுங்கி இருந்தாலே போதும். { "வந்த நாள் முதல் இந்த நாள் வரை... வானம் மாறவில்லை... வான்மதியும், மீனும், கடல் காற்றும், மலரும், மண்ணும், கொடியும், சோலையும், நதியும் மாறவில்லை... மனிதன் மாறிவிட்டான்" (படம் : பாவ மன்னிப்பு ) }

சரி, அவர்களை எவ்வாறு கண்டுபிடிப்பது ? அதற்கு பல வழிகள் உள்ளன... பேசுபவரின் கண்ணைப் பார்த்து, பேச்சை வைத்து, செய்கைகளை வைத்து... இன்னும் நிறைய சொல்லலாம். இதற்கு நாம் பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக "நான் இருக்கிறேன் கவலைப்படாதே / நான் உதவி செய்கிறேன்" என்று ஒன்றுக்கு நான்கு முறை சொல்பவர்களை (யாராக இருந்தாலும்) நம்பவே கூடாது. சொல்பவர்கள் யாரும் செய்வதில்லை. செய்பவர்கள் யாரும் சொல்வதில்லை. { அடடே ! பஞ்ச் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டியா ? "நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும், நல்லவர் கெட்டவர் யாரென்றும், பழகும் போதும் தெரிவதில்லை, பாழாய் போன இந்த பூமியிலே... முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள், முதுகுக்கு பின்னால் சீரும்... முகஸ்துதி பேசும், வளையும் குழையும், காரியமானதும் மாறும்..ம்... காரியமானதும் மாறும்" (படம் : நாடோடி) }

நம்ம திருவள்ளுவர் "தெரிந்து தெளிதல்" அதிகாரத்தில், (குறள் எண் 501 முதல் 510௦ வரை) இந்த இரட்டை வேசம் போடும் ஆசாமிகளை எவ்வாறு கண்டு கொள்வது, யார் யார் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், யார் யாரை நம்ப வேண்டும், நம்பிய பின் என்னென்ன செய்யக்கூடாது - என்று பல விசயங்கள் சொல்லி இருந்தாலும், அவற்றில் இரண்டு குறள்கள் மட்டும் (குறள் எண் 502 மற்றும் 504)
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.
பொருள் : நல்ல குடியிலே பிறந்து {நல்ல மனிதனாக பிறந்து}, குற்றங்கள் இல்லாதவனாய், பழிச்சொல் வரக் கூடாதென்று அஞ்சும் மானமுள்ளவனிடத்திலேயே நம்பிக்கை வைக்க வேண்டும்.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். பொருள் : ஒருவனது குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து, அவை இரண்டினுள் மிகுதியானவற்றைத் தெரிந்து, அதற்குத் தகுந்தபடியே அவனைக் கொள்ள வேண்டும்.

நண்பர்களே, நாம் இருக்கும் இடம் பொறுத்து தான் நம் குணம் நல்லதாகவோ, கெட்டதாகவோ மாறுகிறது... அது நம் மனம் தான் தீர்மானிக்க வேண்டும். {அவனால் தான், நான் கெட்டேன் என்பதை விட என்னால் அவன் திருத்தினான் என்பது சிறப்பு.} உண்மையான ஆன்மீகம் என்பதே பிறரிடம் நம்மை காண்பது தான் - ஞாபகம் இருக்கட்டும். ஆக என்னைப் பொறுத்தவரை,

மனிதனின் மிகப்பெரிய எதிரி : அவரவர் மனம் தான்.

{ "பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு... கண் மூடி போகிறவர் போகட்டுமே... என் மனதை நான் அறிவேன், என் உறவை நான் மறவேன், எது ஆன போதிலும் ஆகட்டுமே... நன்றி மறவாத நல்ல மனம் போதும், என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்... கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்... உன்னை ஏமாற்றும், நீ காணும் தோற்றம்... உண்மை இல்லாதது... அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும், அடையாளம் காட்டும்... பொய்யே சொல்லாதது (படம் : நினைத்ததை முடிப்பவன்)" }


dindiguldhanabalan. thanks

சனி, 28 ஜூலை, 2012

இலவசம் வேண்டாம் நண்பா


இலவசம் வேண்டாம் நண்பா

நானும் மற்றொருவரும் பேசிக்கொண்டு இருந்தோம் ,

அவர் என்னை பார்த்து -
"எதற்க்காக இத்தனை கஷ்டபடுகிறாய் ?"

அதற்க்கு நான் -
"கஷ்டப்படாமல் வாழ்க்கையை எப்படி நடத்த முடியும் "

அதற்க்கு அவர் சிரித்துக்கொண்டே -
"என்னை பார் , இலவச அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிவிடுவேன் போரடித்தால் இலவசமாக கொடுத்த வண்ண தொலைக்காட்சியை பார்த்து பொழுதை கழிப்பேன், உழைக்காமல் நோய் வந்தால் இலவசமாக அரசு காப்பிடு அதில் உயர் சிகிச்சை பெறுவேன் "

நான் -
"உழைக்காமல் எப்படி இத்தனையும் முடியுமா ?"
அவர் சிரித்துக்கொண்டே -
"நாம் யார் தெரியுமா ?
"தமிழ் நாட்டு குடிமகன்"
நம் நாட்டில் உணவிற்கு அரிசி இலவசமாக தருகிறார்கள்,
சமையல் கேஸ் அடுப்பும் இலவசம்,
பொழுது போக்க வண்ண தொலைகாட்சி இலவசம்,
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சை இலவசம்,
எதற்கு உழைக்க வேண்டும்?"

நான்-
"உன் எதிர்கால சந்ததியர்களின் நிலை என்ன ?"

நமட்டு சிரிப்பில் அவர்-
"மனைவி பிள்ளை பெற்றால் இலவச சிகிச்சையுடன் ருபாய் 5000 , குழந்தைகளுக்கு இலவச படிப்பு மற்றும் சத்தான உணவு அதுவும் முட்டையுடன், பாட புத்தகங்கள் இலவசம் பள்ளிக்கு செல்ல மிதிவண்டி இலவசம் , பேருந்து கட்டணம் இலவசம்,
பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை 25000 இலவசம், ஒரு பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்"
தேவை என்றால் மாப்பிள்ளை பார்க்க பேப்பரில் இலவச விளம்பரம், மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும், இவ்வளவு இலவ்காசம் இருக்க நாம் எதற்கு உழைக்கனும் "

வியப்பில் வியந்து போனேன் நான் -
"என் நண்பனே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?"
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உள்ளது...
ஒன்று லஞ்சம்..!
மற்றொன்று பிச்சை..!
இதில் நீ எந்த வகை ? எதை நான் எடுத்துக்கொள்வது ?
உழைக்காமல் உண்டு சோம்பேறி ஆகிறாய் - ஒரு வேலை இலவசம் நின்று போனால் உன் நிலை என்ன ????
கஷ்ட்டப்பட்டு உழைத்தவர்களிடம் களவாட நீ உள்ளாவாய்,
சரி இதே நிலை வளர்ந்தால் - அதாவது இலவசம் வளர்ந்தால்
அமைதி பூங்காவான தமிழகம் கள்வர் பூமியாக மாறும் நிலை
வெகு தொலைவில் இல்லை .
நண்பனே விழித்தெழு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு
தமுலகத்தை தலை நிமிரசெய்திடு
நாளைய தமிழகம் நம் கையில் நண்பனே சிந்திப்பாயா இந்தியாவும் வல்லரசாக வேண்டும் அப்படி ஆகவில்லை என்றாலும் சரி ஒரு சோம்பேறியை பெற்ற தாய் இவள் என்ற உன் அன்னையை இழிவுபடாமல் பார்த்துக்கொள்"
என நான் கத்தி முடிப்பதற்குள் அவன் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டான் ...!!!

வியாழன், 26 ஜூலை, 2012

அன்னையரை போற்றுவோம்​!!!


அன்னையரை போற்றுவோம்​!!!

அன்னையரை போற்றுவோம்​!!!
அன்னை, இறைவன் இவ்வுலகில் மனிதனுக்கு அளித்த அற்புதமான உறவாகும். அம்மா, மம்மி, மதர், உம்மா, மா என்று பல்வேறு மொழிகளில் தாய்க்கான சொற்கள் காணப்பட்டாலும் அவற்றிற்கிடையே ஒரு இனம் புரியாத தொடர்பிருப்பதை உணரமுடியும்.

திங்கள், 16 ஜூலை, 2012

மனசு பெருத்த மாமனிதர் காமராஜர் - இரா. எட்வின்



இந்த பதிவு வாலறிவன் அவர்களால் ஞாயிறு, 15 ஜூலை, 2012 | 7:39 PM மணிக்கு பதியப்பட்டது.


மனசு பெருத்த மாமனிதர்

எப்போதோ ஒரு முறை தமிழருவி மணியன் சொன்னார்,

“தலைவர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் பெருந்தலைவர் ஒருவரை எப்போதாவதுதான் ஒரு சமூகம் அபூர்வமாக ஈன்றெடுக்கும்”

500 மில்லியன் ஆண்டு பழைய பக்ரீரியா உயிர்த்தது !


500 மில்லியன் ஆண்டு பழைய பக்ரீரியா உயிர்த்தது !
13 July, 2012 by admin
உலகம் போற போக்கைப் பார்த்தால் ஜுராசிக் பார்க் படம் உண்மையாகிவிடுமோ என்று தோன்றுகிறது. ஜுராசிக் பார்க் என்னும் படத்தில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்து பின்னர் முற்றாக அழிந்துபோன டைனசோர்களை உயிரூட்டி இருப்பார்கள். அதாவது அதன் பொரிக்காத முட்டையை எடுத்து அதில் உள்ள டி.என்.ஏ யை பிரித்தெடுத்து டைனசோர்களை உருவாக்கியது போல அக்கதை அமைந்திருந்தது. ஆனால் அது தற்போது சாத்தியமாகும் ஒரு விடையம் என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். உலகம் போறபோக்கில் பல வம்புகளை நாம் விலைகொடுத்து வாங்கவேண்டி இருக்கும் போலத் தோணுது !

சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பக்ரீரியா ஒன்றை விஞ்ஞானிகள் உயிரூட்டியுள்ளனர். அதாவது இறந்த அந்த பக்ரீரியாவை மீண்டு உயிரூட்டியுள்ளனர். இது எவ்வாறு சாத்தியம் என்று கேட்கிறீர்களா ? 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து, ஆனால் இயற்கையாகவே பாதுகாத்து வரப்பட்ட பக்ரீரியா ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வைத்திருந்தார்கள். அதன் ஜீன்களை தனியே பிரித்து எடுத்து, ஈ கொயில் என்னும் பக்ரீரியாவுடன் இனப்பெருக்கம் செய்யவைத்து, பின்னர் அதன் ஜீன்களை எடுத்து தனியாக ஒரு பக்ரீரியாவை அவர்கள் உருவாக்கியுள்ளார்கள். இது இந்த 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பக்ரீரியாவின் மூலப் பிரதி ஆகும்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட பக்ரீரியா, தற்போது(நிகழ்காலத்தில்) உள்ள பக்ரீரியாக்களை விட நல்ல சுகதேகியாகவும், வீரியம் மிக்கதாகவும் இருப்பதாக நாசாவின் உயிரியல் விஞ்ஞானப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த பக்ரீரியா படுவேகமாக இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதாகவும், அது பெருகிக்கொண்டு செல்வதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இதனால் மனிதர்களுக்கு என்ன ஆபத்து விளையும் என்பது தொடர்பாகவும், இது நல்ல பக்ரீரியாவா இல்லை மனிதர்களுக்கு கேடுவிளைவிக்கும் பக்ரீரியாவா என்றும் அவர்கள் தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றனர்.

படு ஆபத்தான இந்த ஆராட்சியை மேற்கொள்ளும் நாடு எது என்று நாம் சொல்லவே தேவையில்லை ! சாட் சாத் அமெரிக்காவே தான்... இவ்வாறு தான் இவர்கள் எயிட்ஸ் வைரசையும் கண்டு பிடித்து பரப்பினார்கள் ! ... இபோது பக்ரீரியாவோடும் விளையாடுகிறார்கள்... கிரிகெட் விளையாடலாம் , வாலிபோல் விளையாடலாம் ஏண்டா பக்ரீரியாவோட விளையாடுறீங்க ? கவுண்டமணி இப்படித்தான் சொல்லியிருப்பரில...




athirvu thanks