பக்கங்கள்

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

முடிவெடுக்கக் கற்கலாமா? -2 ( வை.கோ.. கிட்ட கேட்கலாமான்னு சொல்லாதீங்க)


முடிவெடுக்கக் கற்கலாமா? -2 ( வை.கோ.. கிட்ட கேட்கலாமான்னு சொல்லாதீங்க)


முடிவெடுப்பதற்கு நம்முன் இருக்கும் விஷயங்களை மூன்று கட்டங்களில் அடக்கிவிடலாம். 
1. உடனே...உடனே...
2. இப்போதைக்கு வேண்டாம்.
3. வேண்டவே வேண்டாம்... 
உதாரணங்கள் மூலம் இதை எளிதாக புரிந்துகொள்ளலாம்.

சிலருக்கு டூவீலர் என்றாலே பயம் வந்துவிடும் . ஆக்சிடென்ட், டிராபிக், டஸ்ட் என ஆயிரம்  காரணம் சொல்வார்கள். இவற்றுக்கு பயந்து டூவீலர்  ஓட்டுவதை கற்காமல்விட்டால் வளர்ந்த பிறகு ரொம்ப கஷ்டமாகிவிடும். எனவே இதைப்போல் உள்ளவற்றை “  உடனே... உடனே ” கட்டத்தில் போடவேண்டும்.

ரு கட்டத்தில் எல்லா மாணவர்களுக்கும் வருகிற  எண்ணங்களுள் ஒன்று காதல். அதாவது ஈர்ப்பு. இது படிப்புச் சிந்தனையைக் கலைக்கும் என்பதால் இதை தவிர்க்கலாம். படிக்கிற வயதில் “நட்பு ”  என்கிற உறவைத் தாண்டி வேறு பக்கம் போகவே கூடாது. இதை  “ இப்போதைக்கு வேண்டாம் ” கட்டத்தில் போட்டு வைக்கலாம்.

ந்தப் பிரச்சனை எல்லா மாணவர்களுக்கும் வரக்கூடியதல்ல. ஒரு சிலருக்கு மட்டுமே வரும். ஆனாலும் மிகவும் முக்கியமானது தீய நட்பால் புகைப்பிடித்தல், போதை போன்ற மோசமான பழக்கங்களுக்கு அடிமையாக நேரிடும். அப்பழக்கம் அம்மாணவனை மட்டுமல்ல அவனுடைய குடும்பத்தையே சீரழித்துவிடும்.
 இதை “ வேண்டவே வேண்டாம் ” கட்டத்தில் போட்டு விடுங்கள்.

ந்தக் கட்டங்களில் உள்ள விஷயங்களை நாம் திரும்பி பார்க்ககூடாது. குப்பைத் தொட்டி சமாச்சாரங்கள்  என்று ஒதுக்கிவிட வேண்டும்.
மேலும் சில முடிவுகளை அடுத்த தன்னம்பிக்கை பதிவில் காண்போம்.
                          
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக