பக்கங்கள்

சனி, 2 பிப்ரவரி, 2013

சிறுமிக்காக தெருவோரத்தில் அமர்ந்திருந்த இளவரசர்


[ புதன்கிழமை, 30 சனவரி, 2013, ]
 
சிறுமிக்காக தெருவோரத்தில்
பள்ளி சிறுமிக்காக தெருவோரத்தில் அமர்ந்திருந்த அபுதாபி இளவரசரால் பரபரப்பு ஏற்பட்டது. அபுதாபியின் இளவரசரும், இராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர், செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த இளவரசர் உடனே காரை விட்டு இறங்கி சிறுமியிடம், ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய்? என கேட்டார்.
அதற்கு அச்சிறும், எனது தந்தை அழைத்து செல்ல இன்னும் வரவில்லை, அதனால் தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என பதிலளித்தார்.
உடனே, தனது காரில் இறக்கிவிடுவதாக இளவரசர் கூறினார், அதற்கு சிறுமியே முன்பின் தெரியாத நபர்களிடம் பேசக்கூடாது என தன் தந்தை தெரிவித்ததாக கூறியுள்ளார்.
உடனே உதவியாளர் அச்சிறுமியிடம், இவர் யாரோ அல்ல அபுதாபியின் இளவரசர் என்று கூறினார். அதற்கு சிறுமி, அது எனக்குத் தெரியும். ஆனால் பழக்கமில்லாதவர்களுடன் செல்லக் கூடாது என்று என் தந்தை கூறியுள்ளார் என்றார்.
இதைக் கேட்ட இளவரசர் சிரித்துவிட்டார். சிறுமியின் தந்தை வரும்வரை அவருக்கு துணையாக சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.
இளவரசர் சாலையோரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்த மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டனர்.

viyapu. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக